ஆன்லைனில் பெண்களை ‘ஆர்டர்’ செய்து பாலியல் சுரண்டல்? அதிர்ச்சியளிக்கும் சைபர் வலைப்பின்னல் வெளிச்சம்!



hi-tech-prostituted-in-himachal-pradesh

டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், இணையதளங்களைப் பயன்படுத்தி பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் சட்டவிரோத வலைப்பின்னல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தக் கும்பல்கள் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் தளங்களில் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு விவரங்களை பதிவிட்டு, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து, பின்னர் குறிப்பிட்ட இடங்களுக்கு பெண்களை அழைத்துச் செல்லும் வகையில் இடைத்தரகர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காட்டுக்குள் துண்டாக வெட்டப்பட்ட பெண்னின் உடல் … நரபலி பூஜை? ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சி!

prostitude

இந்தச் செயல்பாடுகளுக்குப் பின்னால் செயல்படும் கும்பல்கள், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களை குறிவைத்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை சுரண்டலில் சிக்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சட்டவிரோத இணையதளங்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் செயல்படும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பெண்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவது, இணையவழி சுரண்டல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் பெண்கள் உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.. மனைவி, 3 மகள்கள் கொலை.. தந்தை தலைமறைவு!