தேவையில்லாத அரசியலை ஏன் பேச வேண்டும்? விஜய் சேதுபதியை சாடிய அம்பிகா!



Ambika condemned against vijay Sethupathi

தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான அம்பிகா, சமீபத்தில் அளித்த சிறப்பு பேட்டியில் தமிழக அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அவர் பேசியுள்ளார்.

பொதுவாக பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தான் பார்ப்பதில்லை என்று தெரிவித்த அம்பிகா, சமீபத்தில் நிகழ்ச்சியின் சில பகுதிகளைப் பார்த்ததாகக் கூறினார். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் குறித்தும் அம்பிகா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதி இருந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவர் பேசிய எதையுமே நிச்சயமாகப் பேசியிருக்க மாட்டேன் என அம்பிகா தெரிவித்துள்ளார். மேலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியின் மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்துதான் பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சியைத் தாண்டி தேவையற்ற அரசியல் அல்லது சர்ச்சையான விவகாரங்களை மேடைக்குக் கொண்டு வருவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று தொடக்கம்: வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார்?

குறிப்பாக, விஜய் சேதுபதி பிக் பாஸ் மேடையில் பேசிய அந்தக் கருத்தில் தனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை என்று கூறியுள்ள அம்பிகா, அவரது பேச்சு தவறானது என்ற தனது நிலைப்பாட்டையும் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.இதனால், விஜய் சேதுபதியின் பிக் பாஸ் பேச்சு தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று தொடக்கம்: வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார்?