தலை முடியை பிடுங்கி சித்ரவதை.. 3 வயது பிஞ்சு கொடூர மரணம்.. தாயின் 2 வது கணவன் வெறிச்செயல்.! 



Stepfather Arrested After Allegedly Torturing and Killing 3-Year-Old Girl in Sivakasi

பச்சிளம் குழந்தையை கொலை செய்ததாக தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காதல் திருமணம்: 

3 Year Old Baby Killed: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், வைகோ நகரில் வசித்து வருபவர் சுவாதி (வயது 22). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துரைப்பாண்டி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய விஷ்ணுபிரியா என்ற மகள் இருக்கிறார். 

இதையும் படிங்க: உன்னுடைய போதைக்கு பொண்டாட்டி, புள்ள ஊறுகாய்யா.... 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...! சிவகாசியில் நடந்த அதிர்ச்சி....!!!

பிரிவு: 

இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக சுவாதி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குடும்ப செலவுக்காக வெம்பக்கோட்டையில் செயல்படும் பட்டாசு ஆலையில் சுவாதி வேலையும் பார்த்து வந்துள்ளார். 

Crime news

பழக்கம்: 

அச்சமயம், அதே ஆலையில் வேலை பார்த்து வந்த சிவகாசி பேராபட்டியில் வசித்து வரும் விக்னேஸ்வரன் (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்து வாழலாம் என்று முடிவெடுத்து, 20 நாட்களுக்கு முன்னர் திருமணமும் செய்துள்ளனர். 

குழந்தை கொலை:  

திருமணத்துக்குப்பின் திருத்தங்கல்  பசும்பொன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று இரவில் விக்னேஸ்வரன் சுவாதி மற்றும் அவரது குழந்தையை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். குழந்தையின் தலை முடியை பிடுங்கியதில், பச்சிளம் பிஞ்சு பரிதாபமாக உயிரிழந்தது.  

Crime news

விசாரணை: 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர் விக்னேஸ்வரனை கைது செய்தனர்.  

இதையும் படிங்க: குழந்தை பிறந்து 30 நாட்கள் தான் ஆகுது.. ஆன்லைனில் பணம் இழந்த காவலர் விபரீதம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!