நட்பால் நண்பருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது! விஜய், த்ரிஷா நட்பு குறித்து அம்பிகா அதிரடி கருத்து!



Ambika speech about vijay thrisha friendship

தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான அம்பிகா, சமீபத்தில் அளித்த சிறப்பு பேட்டியில் தமிழக அரசியல், சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் பேசப்படும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

அப்போது நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இடையேயான நட்பு குறித்தும், அதனைச் சுற்றி சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அம்பிகா, திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு இடையே நட்பு இருப்பது மிகவும் இயல்பான விஷயம் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஒருவர் உயர்ந்த பொறுப்பில் இருக்கும்போது அல்லது பொதுவெளியில் இயங்கும்போது, தங்களது தனிப்பட்ட நட்பால் அவர்களுக்கு எந்தவிதமான எதிர்மறை விமர்சனமோ, கெட்ட பெயரோ ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அம்பிகா கூறினார்.

இதையும் படிங்க: தேவையில்லாத அரசியலை ஏன் பேச வேண்டும்? விஜய் சேதுபதியை சாடிய அம்பிகா!

மேலும், நான் த்ரிஷாவின் இடத்தில் இருந்திருந்தால், என்னுடைய நட்பால் என் நண்பருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்றால், அதைத் தவிர்க்கும் வகையில் நிச்சயம் எச்சரிக்கையாக இருந்திருப்பேன். அதுதான் அந்த நட்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை என அம்பிகா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேவையில்லாத அரசியலை ஏன் பேச வேண்டும்? விஜய் சேதுபதியை சாடிய அம்பிகா!