ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
தேர்தல் அறிவிப்பு வந்த மறுநாளே ஆட்டத்தை ஆட ஆரம்பித்த அதிமுக! களத்தில் எடப்பாடி காட்டும் அதிவேகம்... திணறும் திமுக! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தனித்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த 100 நாட்களிலேயே நடைபெறும் இந்தத் தேர்தல், அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான களமாக மாறியுள்ளது. மற்ற கட்சிகள் இன்னும் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்யாத நிலையில், அதிமுக தனது தேர்தல் பணிகளை வேகமாக தொடங்கியுள்ளது.
இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
காலியாக உள்ள 7 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் எம். எல்.ஏக்கள் மூலம் விஜய் வைக்கப்போகும் செக்! திமுக, அதிமுக நிலை என்ன? வெளியான ரகசிய தகவல்...!!!
தேர்தல் அறிவித்த மறுநாளே அதிமுக அதிரடி
ஆளுங்கட்சியான தவெகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், அதிமுக முந்திக்கொண்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனு விநியோகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் வேகம் காட்டுமா அதிமுக?
அதிமுகவைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து பதவிகளை ராஜினாமா செய்ததால் கட்சிக்குள் சோர்வு ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், வேட்பாளர் தேர்வு பணிகளை உடனடியாக தொடங்கியிருப்பது தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தேர்தல் வேகம் மட்டும் போதாது; பிரச்சாரம், வாக்குச்சாவடி பணிகள், வாக்கு சேகரிப்பு என அடுத்தடுத்த கட்டங்களிலும் அதே வேகத்தை தக்கவைத்தால்தான் பலன் கிடைக்கும் என கட்சியினர் கருதுகின்றனர்.
100 நாள் தவெக ஆட்சிக்கு கிடைக்கும் மக்கள் தீர்ப்பாகவும், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு முக்கியமான சோதனையாகவும் இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. விருப்ப மனு விநியோகத்தில் தொடங்கியுள்ள அதிமுகவின் வேகம், வாக்குப்பதிவு நாளில் வெற்றியாக மாறுமா என்பதே அடுத்தகட்ட அரசியல் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் திமுகவுக்கு செக் வைக்கும் எடப்பாடி! தலைகீழாக மாறப்போகும் தமிழக அரசியல் களம்....!!!