இரவில் தூக்கம் வராமல் அவதி படுகிறீர்களா... அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்.!
இரவில் தூக்கம் வராமல் அவதி படுகிறீர்களா... அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்.!

இரவில் தூக்கம் வராமல் நீங்கள் அவதி படுவதற்கு முக்கிய காரணம் அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிடுவதும், சர்க்கரை கலந்த பொருட்களையும் சாப்பிடுவதும் தான் காரணம்.
எனவே இரவில் சாப்பிட்டு விட்டு தூக்க செல்வதற்கு முன்பு இந்த பானங்களை மட்டும் குடுத்து விட்டு தூக்க செல்லுங்கள்.
1. இரவில் தூங்குவதற்கு முன்பு பால் பருகும் பழக்கத்தை குழந்தை பருவத்திலிருந்தே நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் தர வல்லது. அதில் கால்சியம் மற்றும் டிரிப்டோபன் கலந்திருக்கிறது. அது நன்றாக தூங்குவதற்கு உதவி புரியும். ஆனால் பருகுவது தரமான பாலாக இருக்க வேண்டும்.
2. கிரீன் டீயை இரவில் குடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். குறிப்பாக அது தூக்கத்திற்கு வழிவகை செய்யும். உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மன அழுத்தம், கவலையை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.
3. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு திராட்சை ஜூஸ் சிறிதளவு பருகலாம். அதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. அது நன்றாக தூங்க உதவி செய்யும். தொடர்ந்து திராட்சை ஜூஸ் பருகி வந்தால் எடை இழப்புக்கும் வழிவகுக்கும். சாமந்தி பூ டீயும் பருகலாம். அது தூக்கத்தை வரவழைப்பதோடு மனதிற்கு அமைதியையும் உண்டாக்கும். நரம்புகளுக்கும் நலம் பயக்கும். உடலில் குளுக்கோஸ் அளவையும், கட்டுப்படுத்தும்.