சி.எஸ்.கே தோற்றாலும் இவங்க பேமஸ் ஆயிட்டாங்க!! வைரலாகும் நடிகையின் கியூட் ரியாக்சன்..
எனக்கு ஒரு திருமணமெல்லாம் பத்தாது அதனால்...விபரீத ஆசையால் ரசிகர்களை தெறிக்கவிட்ட இறுதிச்சுற்று நாயகி!
எனக்கு ஒரு திருமணமெல்லாம் பத்தாது அதனால்...விபரீத ஆசையால் ரசிகர்களை தெறிக்கவிட்ட இறுதிச்சுற்று நாயகி!
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதி சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
மேலும் இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங் ஏரளமான தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் . இந்தப் படத்தை அடுத்து ராகவா லாரன்ஸுடன் இணைந்து ‘சிவலிங்கா’ படத்திலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் வணங்காமுடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் நீஙகள் யாரையும் காதலிக்கிறீர்களா? என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ரித்திகா நான் யாரையும் காதலிக்கவில்லை சிங்கிள்தான் என கூறியுள்ளார்.
மேலும் உங்களை நேரில் சந்தித்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் நான் ஒரு திருமணம் மட்டுமில்லை, 5 முறைக்கு மேல் திருமணம் செய்து கொள்வேன். சும்மா விளையாட்டிற்கு கூறவில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன. இல்லையென்றால் நான் திருமணமே செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.