Video : பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம்! ஓடி வந்து இன்ஜினுக்குள் பாய்ந்த வாலிபர்! அடுத்து நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்! வெளியான சிசிடிவி காட்சி...

இத்தாலியின் மிலான் பெர்கமோ விமான நிலையத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம், உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, கல்சினேட் பகுதியில் வசிக்கும் 35 வயதான ஆண்ட்ரியா ருசோ, தனது Fiat 500 காரை விமான நிலையத்துக்கு அருகே நிறுத்திய பின்னர், டிக்கெட் இல்லாமல் விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.
விமான ஓடுபாதைக்கு நேரடி நுழைவு
பாதுகாப்பு தடைகளை மீறிய ஆண்ட்ரியா, நேராக ஓடுபாதைக்கு நுழைந்து, ஸ்பெயினுக்குப் புறப்பட இருந்த Volotea விமானம் V73511 நோக்கி ஓடினார். இது Airbus A319 வகை விமானம் ஆகும். விமானம் புறப்பட தயாராக இருந்த வேளையில், அவர் இடது பக்க இன்ஜினுக்குள் பாய்ந்து உயிரிழந்தார்.
கேமராவில் பதிவான அதிர்ச்சி
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், பாதுகாப்பு சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நேரில் கண்ட பயணிகளும், ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். விமானத்தின் பைலட், பயணிகளிடம் ஒரு நபரால் பிரச்சனை ஏற்பட்டதாக அறிவித்தார். உடனடியாக போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மனநலம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்
ஆண்ட்ரியா ருசோ முன்னதாக போதைப்பொருள் வழக்குகளிலும், மனநலம் சிக்கல்களுக்காக சிகிச்சையும் பெற்றிருந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தால் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களும் பயணிகளும் கடும் மன உளைச்சலை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இத்தாலி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இந்த சம்பவத்திற்கு பிறகு, விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HORRIFYING moment man gets SUCKED into plane engine
Andrea Russo DIES instantly
Reports say he ran toward turbine ‘on purpose’
Ground crew WATCH in shock pic.twitter.com/4kDsBLA5wu
— RT (@RT_com) July 11, 2025
இதையும் படிங்க: மாமா இல்லாத நேரத்தில் அத்தையுடன் உல்லாசமாக இருந்த மருமகன்! இறுதியில் உறவினர்கள் சேர்ந்து செய்த அதிர்ச்சிகரமான சம்பவம்!