ஆத்தாடி! சர்ச்சை நாயகி மீரா மிதுனுக்கு இவ்வளவு பெரிய பதவியா? அதுவும் எங்கே பார்த்தீர்களா? தலைசுற்றிபோன ரசிகர்கள்!

ஆத்தாடி! சர்ச்சை நாயகி மீரா மிதுனுக்கு இவ்வளவு பெரிய பதவியா? அதுவும் எங்கே பார்த்தீர்களா? தலைசுற்றிபோன ரசிகர்கள்!



meera mithun got job in corrubtion commision

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் பணமோசடி வழக்கில் சிக்கி தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் மீராமிதுன் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் அங்கும் சக போட்டியாளர்களுடன் மோதல், குறை கூறுதல்  பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றார்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் அவர் தொடந்து  பல சர்ச்சைகளில் சிக்கினார். 

Meera mithun

இதனை தொடர்ந்து மீரா மிதுன் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு பல சர்ச்சைகளை சந்தித்து வரும் மீரா மிதுன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லஞ்ச ஒழிப்பு கமிஷனில் இருந்து தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் என்ற பதவி தனக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான அடையாள அட்டை மாற்றும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆடி போயுள்ளனர்.