மனசு எப்படி வலிச்சுருக்கும்...! எதிர்பார்ப்புடன் வீடு திரும்பிய மகளுக்கு கிடைத்த பேரதிர்ச்சி! நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!
தைவானில் வெளிநாட்டுப் பணியாளராக வேலை செய்து வந்த இந்தோனேசிய இளம்பெண், நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினரைப் பார்க்க சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆனால், பெற்றோருக்கு தெரியாமல் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த அவருக்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது. தந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
குடும்பத்தினரிடம் எதுவும் தெரிவிக்காமல் ரகசியமாக இந்தோனேசியாவுக்கு வந்த அந்த இளம்பெண், நேராக தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மகளைப் பார்த்ததும் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வாசலில் நின்றவருக்கு, அங்கு தொங்கியிருந்த மஞ்சள் கொடி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: காதலுக்கு வயது தடையில்லை? 72 வயதில் 20 வயது பெண்ணை கரம் பிடித்த கால்பந்து ஜாம்பவான்!
வீட்டு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி
இறப்பைக் குறிக்கும் வகையில் மஞ்சள் கொடி கட்டப்பட்டிருப்பதைப் பார்த்த அவர் பதற்றமடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் சென்றபோது, தனது தந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை அறிந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு குடும்பத்தைச் சந்திக்க வந்த நேரத்தில் இந்த செய்தி அவரை நிலைகுலையச் செய்தது.
மகளைப் பார்த்ததும் கதறிய தாய்
அப்போது தூக்கத்தில் இருந்த தாய், எதிர்பாராதவிதமாக வாசலில் மகளைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகளைப் பார்த்த மகிழ்ச்சியுடன், கணவரை இழந்த வேதனையும் சேர்ந்து தாயின் அழுகையில் வெளிப்பட்டது. தாயும் மகளும் ஒருவரையொருவர் அணைத்தபடி கண்ணீர் விட்டனர்.
தாய்-மகள் இருவரும் கட்டிப்பிடித்து அழும் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தாய் மகள் சந்திப்பு தொடர்பான அந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எதிர்பார்ப்புடன் வீடு திரும்பிய மகளுக்கு கிடைத்த இந்த அதிர்ச்சி, குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத தருணங்களை நினைவுபடுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
فتاة اندونيسية كانت مغتربة في تايوان، وهنا عادت إلى اندونيسيا ولم تخبر أهلها لانها تريد مفاجأتهم، ولم تعلم ان هناك مفاجأة مُرة كانت تنتظرها
— Saif (@diol2n) September 13, 2026
عند دخولها لاحظت وجود راية صفراء وهي دلالة على وجود وفاة وعزاء في اندونيسيا، لتكتشف ان والدها توفى، استيقظت الام وتفاجأت برؤية ابنتها… pic.twitter.com/0q9FOt911r
இதையும் படிங்க: மயக்க மருந்து ஒழுங்கா வேலை செய்யல போல....! திடீரென கண்விழித்து கூண்டை உடைத்து வனக் காவலரைத் தாக்கிய சிறுத்தை...! நடுங்கவைக்கும் காட்சி...!!!