திருமணம் முடிந்த அடுத்த 3 நாள் பாத்ரூம் பக்கமே போகக்கூடாது!! வியக்கவைக்கும் வினோத காரணம்..

திருமணம் முடிந்த அடுத்த 3 நாள் பாத்ரூம் பக்கமே போகக்கூடாது!! வியக்கவைக்கும் வினோத காரணம்..



Indonesia Newly Married Couples should not Using the Toilet for 3 days

திருமணம் முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்கு புதுமண தம்பதியினர் இயற்கை உபாதை கழிக்க கூடாது என்ற சட்டம் கேட்போரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கென ஒரு தனி கோட்பாடு, கொள்கை, சமூக பழக்க வழக்கங்கள் என்றுதான் வாழ்ந்துவருகின்றனர். இவை மனித இனத்திற்கு பொதுவான ஒன்றாக இருந்தாலும், சில இடங்களில், சில மனிதர்களால் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் சற்று வித்தியாசமானதாகவும், முரண்பட்டதாகவும் உள்ளது.

Viral News

அதுபோன்ற வினோதமான சமூக பழக்கவழங்களில் ஒன்றுதான் இந்தோனேசியா நாட்டில் பின்பற்றப்படும் ஒன்று. இந்தோனேசிய நாட்டின், ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே இந்த பழக்கவழக்கம் பின்பற்றப்பட்டுவருகிறது. அதவாது, புதிதாக திருமணம் முடிந்த தம்பதியினர், திருமணம் முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்கு பாத்ரூம் கழிக்க கூடாது.

ஒருவேளை அவர்கள் இதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு பிறகும் குழந்தை இறந்து பிறக்கலாம், அல்லது கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் இறந்துவிடலாம் என அவர்களால் நம்பப்படுகிறது. அதனால், திருமணம் முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்கு, குறைந்த அளவிலானா உணவு, நீர் போன்றவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர்.

இவ்வாறு 3 நாட்கள் அவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அவர்களது வாழ்க்கையில், வாழ்க்கை துணைக்குள் ஒரு பெரிய பிணைப்பு உண்டாகும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.