மது விருந்தில் நடந்த அட்டூழியம்! மகனின் 16 வயது நண்பனுடன் அத்துமீறிய தாய்! மகன் ஜன்னல் இடுக்கிலும், மகள் நீர் பிரதிபலிப்பிலும் கண்ட அந்த அதிர்ச்சி.... அடுத்தடுத்து வெளிவந்த மேயரின் பகீர் சாட்சிகள்...!!!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள டெரிடர் நகரத்தின் முன்னாள் மேயர் மிஸ்டி ராபர்ட்ஸ் மீது சுமத்தப்பட்டிருந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. தனது மகனின் 16 வயது நண்பருடன் தகாத உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த அவர், தற்போது குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
43 வயதான மிஸ்டி ராபர்ட்ஸ், கடந்த 2024 ஜூலை மாத இறுதியில் மேயர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடந்த மது விருந்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி சாட்சிகள்
வழக்கு விசாரணையின் போது, அந்த இரவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் நடுவர் குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ராபர்ட்ஸின் இரண்டு பிள்ளைகளும் அவரது மருமகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். அன்று இரவு முன்னாள் மேயரும் அந்த சிறுவனும் ஒன்றாக இருந்ததை பார்த்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்ட விசாரணை பதிவுகளில், ராபர்ட்ஸின் மகன் தனது நண்பருடன் தாய் உடலுறவில் இருந்ததை ஜன்னல் வழியாக பார்த்ததாக புலனாய்வாளர்களிடம் கூறியிருப்பதும் இடம்பெற்றது. அவரது மகளும் நீச்சல் குளத்தின் நீர் பிரதிபலிப்பின் மூலம் அதைக் கண்டதாக தெரிவித்ததாக கூறப்பட்டது.
கைபேசி வீடியோவும் டிஜிட்டல் ஆதாரங்களும்
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, ராபர்ட்ஸின் மருமகன் அளித்த சாட்சி அமைந்தது. அவர், அறைக்குள் நடந்ததை மறைந்து நின்றபடி கைபேசி மூலம் பதிவு செய்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த வீடியோவை யாரிடமும் பகிரவில்லை என்றும், பின்னர் தனது ஸ்னாப்சாட் நினைவகத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அனுப்பிய குறுஞ்செய்திகளும் நீதிமன்றத்தில் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. அதில், ராபர்ட்ஸ் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு தான் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாக அவர் பதிலளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
‘DoorDash’ டெலிவரி ஓட்டுநர் சாட்சி
வழக்கில் மேலும் ஒரு முக்கிய ஆதாரமாக, DoorDash உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அவர், ராபர்ட்ஸின் வீட்டிற்கு அவசரக்கால கருத்தடை மாத்திரை டெலிவரி செய்ததாக சாட்சியமளித்தார்.
அனைத்து தரப்பு சாட்சியங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், சிறாருடன் தகாத முறையில் நடந்துகொண்டது மற்றும் பாலியல் உறவு வைத்துக்கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ராபர்ட்ஸ் 10 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.