16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தொலைக்காட்சி நடிகர் போக்ஸோவில் கைது.! சின்னத்திரையுலகில் அதிர்ச்சி.!
சிறுமியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு தொல்லை கொடுத்த நடிகர், நேரில் சென்று தாக்குதல் நடத்தி போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கிழக்கு புறநகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமிக்கு, அம்மாநில தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ரோகித் சாந்தல் (வயது 29) என்பவரை தெரியும். இதனிடையே, சிறுமியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்ட நடிகர், பலமுறை அவருக்கு தொடக்குக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. தமிழகத்தில் ஷாக்.!
தாக்குதல்:
இதுதொடர்பான தொல்லைகள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூலை 05ம் தேதி சிறுமியின் வீட்டுக்கு பின்தொடர்ந்து சென்ற நடிகர், சிறுமியை தகாத வார்த்தையால் திட்டி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் & கிரிக்கெட் வீரர்:
இதன்பேரில் நடிகருக்கு எதிராக போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். மேலும், இவர் திரையுலகுக்கு வரும் முன் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்திற்காக பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்காப்புக்கலை போட்டியிடும் பங்கேற்றுள்ளார்.
நடிகர் ரோகித் கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநில சின்னத்திரை வட்டாரங்கள் இடையே பேசுபொருளாகி இருக்கிறது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!