BREAKING : 10- ஆம் வகுப்பு முடித்த கையோடு மருத்துவ படிப்பு! மத்திய அரசின் புதிய 'நீட்-பிஏ' அறிவிப்பு..! முழு விபரம் உள்ளே...!!!
10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் நேரடி கல்விப் பாதையை உருவாக்கும் வகையில், மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் இணைந்து புதிய NEET-PA நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. 2026-27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம் கல்வித் துறையில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
10-ம் வகுப்புக்குப் பிறகு 7.5 ஆண்டுகள் மருத்துவப் படிப்பு
புதிய திட்டத்தின்படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலில் 2 ஆண்டுகள் 'ப்ரீ-ஆயுர்வேதா' படிப்பைப் பயில வேண்டும். அதன்பின் 4.5 ஆண்டுகள் பி.ஏ.எம்.எஸ். (BAMS) மருத்துவப் படிப்பும், ஒரு ஆண்டு கட்டாய பயிற்சியும் நிறைவு செய்தால் ஆயுர்வேத மருத்துவர் பட்டம் பெற முடியும். இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.1.77 லட்சம் சம்பளம்.!
தகுதி, தேர்வு முறை என்ன?
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2026 டிசம்பர் 31-ஆம் தேதியன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதிற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும். OMR முறையில் நடைபெறும் இந்த ஆப்லைன் தேர்வில் 120 கொள்குறி வினாக்கள் இடம்பெறும். தேர்வு நேரம் 150 நிமிடங்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண் கழிப்பு இல்லை. சமஸ்கிருதம், அறிவியல், கணிதம் மற்றும் ஆயுர்வேத அடிப்படைத் தத்துவங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். மாணவர்கள் சமஸ்கிருதம், ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதலாம்.
புதிய திட்டத்தைச் சுற்றியுள்ள விவாதம்
இந்த சமஸ்கிருதம் சார்ந்த நுழைவுத் தேர்வு கல்வி வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதம் கற்கும் மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை கிடைக்கும் சூழல் உருவாகுமா என்ற கேள்விகளை சில தரப்பினர் எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், ஆயுர்வேத குருகுலங்களில் 10-ம் வகுப்புக்குப் பிறகே சேர விரும்பும் மாணவர்களுக்கு இது தனிப்பட்ட வாய்ப்பாக இருக்கும் என்றும், வழக்கமான முறையில் 11, 12-ம் வகுப்பு முடித்து NEET UG மூலம் BAMS படிப்பில் சேரும் நடைமுறையும் தொடர்ந்து இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும், தேர்வு ஆகஸ்ட் 30 அல்லது செப்டம்பர் 6 அன்று நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! வங்கி கணக்கில் ரூ.4000.... தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!!