இரவில் 2 பிள்ளைகளுக்கும் பிடித்த உணவு வாங்கி கொடுத்துட்டு அப்பா செய்த பயங்கரம் ! அடுத்த நாள் காலையில் வீட்டை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.... தூத்துக்குடியில் அரங்கேறிய பகீர் சம்பவம்.!!!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர் ஒருவர், தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குடும்ப பிரச்சினைக்கு பிறகு நடந்த சோகம்
சிறுபாடு சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான மரிய மிக்கேல் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சபிதா சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, 9-ம் வகுப்பு படித்து வந்த மகள் மரிய நிரோஷா மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்த மகன் மரிய கெனிஸ்டன் ஆகியோருடன் அவர் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!
தகவலின்படி, சம்பவத்திற்கு முந்தைய இரவு குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்த மரிய மிக்கேல், அவர்கள் உறங்கிய பின்னர் மின்சார வயர்களை பயன்படுத்தி இந்த விபரீத செயலில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடு திறக்காததால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்
மறுநாள் காலை நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மூவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது
உயிரிழந்த மூவரின் உடல்களையும் கைப்பற்றிய தூத்துக்குடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.