#அதிர்ச்சி : மருத்துவர் என்ற பெயரில் 103 குழந்தைகளை சீரழித்த கொடூரம்... சிக்கிய 7,000-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள்! மருத்துவ உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்...!!!



earl-bradley-delaware-child-abuse-case

அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிய Earl Bradley தொடர்பான கொடூர வழக்கு மீண்டும் கவனம் பெற்றுள்ளது. 103 பச்சிளம் குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

சம்பவம் நடைபெற்ற காலத்தில் 56 வயதாக இருந்த ஏர்ல் பிராட்லி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதன்முதலில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை விரிவடைந்த நிலையில், நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் அவர்மீது பதிவு செய்யப்பட்டன. தற்போது 75 வயதாகும் அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.

இதையும் படிங்க: திரையில் ஹீரோ.... ஆனால் நிஜத்தில் இப்படியா? 10 வருடமாக 41 வயது பெண்ணை சீரழித்த பிரபல நடிகர் கைது! பரபரப்பில் பாலிவுட்..!!

103 குழந்தைகள் பாதிப்பு

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 160 பக்க குற்றப்பத்திரிக்கையில், 1998 முதல் 2009 வரை நடந்த பல்வேறு கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 103 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் ஒரே ஒரு ஆண் குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் பெண் குழந்தைகள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மொத்தம் 471 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக வந்த குழந்தைகளிடம் மருத்துவர் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. சில குழந்தைகள் பல மாதங்கள் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் நடந்த கொடுமைகள்

பிராட்லியின் ‘Baybe Healthcare’ மருத்துவமனை வளாகத்திலேயே இந்த செயல்கள் நடந்ததாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. குழந்தைகளின் பெற்றோர் வெளியே காத்திருந்த நேரத்தில், உள்ளே உள்ள அறைகளில் இந்த குற்றங்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பின் நடத்தப்பட்ட சோதனையில், 13 மணி நேரத்திற்கும் அதிகமான வீடியோ ஆதாரங்கள், கணினிகள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் 7,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் ஆவணங்கள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் வழக்கின் முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மருத்துவ வாரியத்துக்கும் சர்ச்சை

இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் ஆரம்பத்திலேயே புகார் அளித்திருந்தபோதும், மாநில மருத்துவ வாரியம் அதை அலட்சியப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அங்கு பணியாற்றிய செவிலியர் ஒருவரும் மருத்துவரின் தவறான செயல்களைப் பற்றி சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சட்டப் போராட்டத்தில் இறங்கின. அதன் விளைவாக, சம்பந்தப்பட்ட மருத்துவ அமைப்புகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இறுதியில், Child Abuse Case தொடர்பாக ஏர்ல் பிராட்லிக்கு சாகும் வரை சிறையில் இருக்கும்படியான கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.

 

இதையும் படிங்க: வேலை முடிந்து அதிகாலை வீட்டுக்கு வந்த கணவன்! மனைவியும் வளர்ப்பு மகனும்.... சோஃபாவில் கண்ட அந்த காட்சி! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி!!!