பொறுமையை இழந்த இளம் ஜோடி...! குடும்பத் தகராறில் வெடித்த சண்டை.... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி! நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!!
பெங்களூரு ராஜகோபால் நகர் பகுதியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து ஐடி ஊழியர் பத்மாவதி உயிரிழந்தார். அவரது கணவர் சுமந்த் ஜெயின் மனைவியைத் தாக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவரும் அதே வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
குடும்பத்தகராறு நடந்ததாகக் கூறப்படும் நிலையில், பத்மாவதி வீட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணையைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: 12 பேர் சேர்ந்து மாணவரை அடித்தே கொலை செய்த பயங்கரம்.. சென்னையில் நடந்த திடுக்கிடவைக்கும் சம்பவம்.. பரபரப்பு தகவல்.!
தகராறுக்குப் பிறகு நடந்தது என்ன?
காவல்துறை விசாரணையின்படி, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை தீவிரமடைந்ததாக தெரிகிறது. பத்மாவதி தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னர் சுமந்த் ஜெயின் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் எதிர்பாராத வகையில் உயிரிழந்தது ராஜகோபால நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராஜகோபால் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் இருந்த தடயங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்திருப்பு
பத்மாவதியின் மரணத்திற்கான துல்லியமான காரணம் என்ன, தகராறு எப்போது தொடங்கியது, அதன்பிறகு வீட்டுக்குள் நடந்த நிகழ்வுகள் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே இருவரின் மரணத்துக்கான காரணங்கள் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: வீரனை குடித்துவிட்டு வீரமாக சில்மிஷம் செய்த வடக்கன்ஸ்.. உள்ளே தூக்கி வைத்த போலீஸ்.!