இன்னைக்கே உடனடியாக விசாரிங்க...! எனக்கு ஒரு முடிவு தெரியனும்! சங்கீதா காட்டிய காட்டம்.... செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!



vijay-sangeetha-divorce-case-hearing-chengalpattu

நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கின் விசாரணை இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற விஜய் தரப்பின் கோரிக்கைக்கும், உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற சங்கீதாவின் வலியுறுத்தலுக்கும் இடையே நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இரு தரப்பும் மாறுபட்ட கோரிக்கை

கருத்து வேறுபாடுகள் காரணமாக, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி சங்கீதா மனுத் தாக்கல் செய்திருந்தார். இன்றைய விசாரணையின்போது, தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் வழக்கை வேறு தேதிக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதை சொன்னதும் பயந்து அப்பாவை போயி கட்டிப்பிடிச்சேன்..! அன்னைக்கு நடந்த விஷயத்தை ஓப்பனாக போட்டு உடைத்த ஜேசன் சஞ்சய்..!!!

காணொலி மூலம் ஆஜரான சங்கீதா

இதையடுத்து, காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான சங்கீதா, வழக்கை மேலும் தாமதப்படுத்தாமல் இன்றே விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இரு தரப்பின் வாதங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

பிற்பகலுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

இரு தரப்பின் கோரிக்கைகளையும் கேட்ட செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை இன்றைய பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அடுத்தகட்ட விசாரணையில் வழக்கின் முன்னேற்றம் குறித்து முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: என்னதான் நடக்குது .... நடிகை திரிஷா போட்ட அந்த ஒரு பதிவு..! குஷியில் ரசிகர்கள்..!!!