வேலை முடிந்து அதிகாலை வீட்டுக்கு வந்த கணவன்! மனைவியும் வளர்ப்பு மகனும்.... சோஃபாவில் கண்ட அந்த காட்சி! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி!!!



florida-nurse-jailed-for-abusing-adopted-teen

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வளர்ப்பு மகனுடன் தவறான உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட செவிலியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓகலா பகுதியைச் சேர்ந்த 35 வயதான அலெக்சிஸ் வான் யேட்ஸ் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

விசாரணையின் போது குற்றச்சாட்டுகளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயரை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 9-ம் வகுப்பு மாணவியை 4 மாதங்களாக மாறி மாறி பலாத்காரம் செய்து சிதைத்த 10 பேர்..! ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு நடந்த கொடூரம்...வெளியான திடுக்கிடும் உண்மைகள்!!!

வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தகவலின்படி, கடந்த ஜூலை மாதம் அலெக்சிஸ் தனது குழந்தைகளை தூங்க வைத்த பின்னர், 15 வயது வளர்ப்பு மகனுடன் சோஃபாவில் தகாத உறவில் நேரம் கழித்ததாக கூறப்படுகிறது. வீடியோ கேம் விளையாடியபடியும், திரைப்படம் பார்த்தபடியும் இருந்த இருவருக்கும் இடையே பின்னர் தகாத தொடர்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் வேலை முடிந்து அதிகாலை வீட்டிற்கு திரும்பிய அவரது கணவர் பிராங்க், இருவரையும் சந்தேகத்திற்கிடமான நிலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக சிறுவனை அங்கிருந்து அழைத்துச் சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

இந்த சம்பவம் வெளியே தெரியக் கூடாது என்று அலெக்சிஸ் பின்னர் சிறுவனிடம் தொலைபேசியில் பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் குடும்பத்தினர் புகார் அளிக்க தயங்கிய நிலையில், பின்னர் உறவினர் ஒருவர் காவல்துறையை அணுகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அலெக்சிஸ் வான் யேட்ஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

செவிலியர் உரிமம் ரத்து

இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புளோரிடா சுகாதாரத் துறை அவரது செவிலியர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்துள்ளது. சமூகத்தில் பொறுப்பான பணியில் இருந்த ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது அமெரிக்காவில் கடும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மனஉளைச்சலுக்கு ஆளான அவரது கணவர் பிராங்க், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதையும் படிங்க: அந்த கோலத்தில் அம்மாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 8 வயது மகன்! கள்ளக்காதலனின் பேச்சைக் கேட்டு தாய் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்...!!