#Breaking: மதுரை, தேனி உட்பட 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.!



Vaigai River Water Discharge Warning  


கடந்த சில நாட்களாக தென்மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழையின் காரணமாக, மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் நீர் திறப்பு

இந்நிலையில், வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படும் காரணத்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: 15 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தை; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!

இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் நீரை பெருக்க, வைகை அணையில் இருந்து நீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து வரும் 4 நாட்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் விவகாரம்; பகிரங்க மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்.! விபரம் உள்ளே.!