என்னை காதலிக்க மாட்டியா? நீ உயிரோட இருக்க வேண்டாம்.. சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்.!
காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த மாணவிக்கு கத்திகுத்து விழுந்தது.
பள்ளி மாணவி:
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சி. முட்லூர் பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் (வயது 28). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரின் கிராமத்துக்கு அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்தில், 16 வயதுடைய மாணவி வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!
காதல் தொல்லை:
இவர் அங்குள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, மாணவி பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் மாணவியை பின்தொடர்ந்து செல்லும் ஐயப்பன், காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

படிப்பு முக்கியம்:
தனக்கு படிப்பு முக்கியம் என மாணவி தெரிவித்தும் காதல் தொல்லை ஓயவில்லை. இரன்டு ஆண்டுகளாக நீடித்து வந்த தொல்லை தீராத நிலையில், இளைஞர் கொலை செய்வதாக மிரட்டி இருக்கிறார்.
அத்துமீறல்:
இதனிடையே, நேற்று மாணவி வீட்டில் தனியாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட ஐயப்பன், காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். மாணவி மறுப்பு தெரிவிக்கவே, கத்தியால் மாணவியின் கழுத்து, முதுகில் குத்தி இருக்கிறார்.
புகார்:
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஐயப்பனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஆசிட் வீசிடுவேன்" காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்..!