+2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பெயிண்டர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
12ம் வகுப்பு மாணவி:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 28). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் 17 வயதுடைய மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!
பாலியல் தொல்லை:
இதனிடையே, சிறுமியிடம் இளைஞர் காதலிப்பதாக கூறி இருக்கிறார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். சுமார் 2 நாட்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

வன்கொடுமை உறுதி:
பின் வீட்டுக்கு வந்த மாணவி நடந்ததை கூறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் நெல்லை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
போக்ஸோவில் கைது:
இதனையடுத்து, பெருமாளின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!