+2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!



in Tirunelveli 17 Year Old Girl Raped by Love Boy Friend Later he Arrested Pocso

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பெயிண்டர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

12ம் வகுப்பு மாணவி: 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 28). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் 17 வயதுடைய மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!

பாலியல் தொல்லை:

இதனிடையே, சிறுமியிடம் இளைஞர் காதலிப்பதாக கூறி இருக்கிறார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். சுமார் 2 நாட்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். 

Crime news

வன்கொடுமை உறுதி:

பின் வீட்டுக்கு வந்த மாணவி நடந்ததை கூறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் நெல்லை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

போக்ஸோவில் கைது:

இதனையடுத்து, பெருமாளின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!