கோடிகளில் வாழ்ந்த வாழ்க்கை! இப்போ முதியோர் இல்லத்தில் அடைக்கலம்... மூத்த நடிகர் மோகன் சர்மாவின் வாழ்க்கை சவால்கள்..!!!
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் பங்களித்துள்ள மூத்த கலைஞர் மோகன் சர்மா, சென்னை கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதாக வெளியான தகவல் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
திரையுலகில் தனித்த அடையாளம்
80 வயதான மோகன் சர்மா, ஃபிலிம் சேம்பர் தலைவராக பணியாற்றியதுடன், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII)யில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். ‘பார்த்திபன் கனவு’, ‘சச்சின்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த அவர், தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை வாஹினி புற்றுநோயால் மரணம்! திரையுலகில் பெரும் சோகம்!
தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்த சவால்கள்
நடிகை லட்சுமியின் இரண்டாவது கணவராக இருந்த மோகன் சர்மா, திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் தி.நகரில் கார் விற்பனை மற்றும் வீடு தொடர்பான பிரச்சினையில் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதியோர் இல்லத்தில் தங்கியதற்கான விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்த மோகன் சர்மா, வயது மூப்பு மற்றும் உடல்நல தளர்ச்சி காரணமாக மன அமைதிக்காக தானாகவே முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவ உதவிகளை நண்பர்களே கவனித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த விளக்கம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூச்சுத் திணறல் காரணமாக தமிழ் நடிகை விசித்ரா மருத்துவமனையில் அனுமதி! அவருக்கு அவசர அறுவை சிகிச்சை....!!!