அதிசயமா? அற்புதமா? 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காய்! அதை உடைத்தபோது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி... வைரல் சம்பவம்!!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டாவில் வித்தியாசமான வடிவம் கொண்ட தேங்காய் ஒன்று கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயராமின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த இந்த தேங்காயில் வழக்கத்துக்கு மாறாக நான்கு கண்கள் இருந்தன. இதை உடைத்துப் பார்த்தபோது உள்ளே இரண்டு சிறிய குட்டி தேங்காய்கள் இருப்பது தெரியவந்தது.
நான்கு கண்களுடன் காணப்பட்ட தேங்காய்
ஜெயராமின் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை ஊழியர்கள் உரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மற்ற தேங்காய்களைவிட ஒரு தேங்காய் மட்டும் வித்தியாசமான வடிவத்தில் இருப்பதை கவனித்தனர். பொதுவாக தேங்காய் ஓட்டில் மூன்று கண்கள் காணப்படும் நிலையில், இதில் நான்கு கண்கள் தெளிவாக இருந்தன.
இதையும் படிங்க: ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்... இளம்பெண், 5 வயது சிறுமி கொடூரக் கொலை? கேரளாவில் பெரும் அதிர்ச்சி
உள்ளே இருந்த இரண்டு குட்டி தேங்காய்கள்
வித்தியாசமாக இருந்ததால் அந்த தேங்காயை உடைத்துப் பார்த்தனர். அதற்குள் இரண்டு சிறிய தேங்காய்கள் முழுமையாக வளர்ந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான அமைப்பில் இருந்து மாறுபட்ட இந்த இரட்டை தேங்காய் அமைப்பு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்க்க திரண்ட மக்கள்; சமூக வலைதளங்களில் வைரல்
தகவல் பரவியதும் மண்ணம்பட்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் ஜெயராமின் வீட்டுக்குச் சென்று வித்தியாசமான தேங்காயை நேரில் பார்த்தனர். இதன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதுபோன்ற அரிய அமைப்புடைய தேங்காய்கள் அவ்வப்போது காணப்படுவது குறிப்பிடத்தக்கது.