தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளரை வாகனம் ஏற்றிக் கொலை செய்த கொடூரன்.! அதிர்ச்சி காரணம்.!

தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளரை வாகனம் ஏற்றிக் கொலை செய்த கொடூரன்.! அதிர்ச்சி காரணம்.!


si-murdered-in-thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே  வாழவல்லான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சரக்கு வாகனம் மூலம் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு, குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்டதால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் பாலு ரோந்து பணியில் இருந்த போது போதையில்  தகராறில் ஈடுபட்ட  முருகவேல் என்ற நபரை கண்டித்துள்ளார். 

police

இதனால், ஆத்திரம் அடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார். வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளரை கொன்ற முருகவேலை கைது செய்ய 10  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி ஆய்வாளர்  சரக்கு வாகனம் மூலம் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.