6 வருஷங்களாக 14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கை! பெற்ற தாயே செய்ய கூடாததை மகளிடம் செய்த கொடூரம்! வெளிவந்த பகீர் உண்மை..



shocking-mother-abuse-case-bangalore

பெங்களூரில் வசிக்கும் ஒரு 38 வயது பெண், கடந்த ஆறு ஆண்டுகளாக தனது 14 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அவரை பிரிந்து விட்டார். தாய் மற்றும் மகள் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளிவந்த உண்மை

மாணவி ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவி அளித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தாயின் மீது கடுமையான குற்றச்சாட்டு

மாணவி கூறியது: “தாய் கடந்த 6 ஆண்டுகளாக எனக்கு பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்”. இந்த தகவலை கேட்ட ஆசிரியர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததில், மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவி கதறி அழுதபடியே தன்னுடைய தாய் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: சண்டையில் கோபமடைந்து கணவன் மீது கொதிக்க கொதிக்க அதையெல்லாம் உடம்பில் ஊற்றிய மனைவி! இரவு முழுவதும் அறையில் பூட்டி வைத்து… கொடூர சம்பவம்!

தாய் கைது செய்யப்பட்ட சம்பவம்

பின்னர் போலீசார் மாணவியின் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். தாயின் வாக்குமூலத்தில், “மகளுக்கு கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுத்தேன்” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதையும் படிங்க: இன்ஸ்டா மோகத்தால் வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!