போடு வெடிய... ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000, வேட்டி, சேலை....! அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்...!!!



pongal-rs-3000-cash-gift-vijay-government

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் மக்களுக்கு நற்செய்தி வெளியாகும் எனக் கூறினார்.

ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படுமா?

நடப்பாண்டைப் போலவே வரும் பொங்கல் பண்டிகைக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படுமா என்று அமைச்சர் வெங்கட்ரமணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மக்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

பொங்கல் தொகுப்புடன் பணமும் சேருமா?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வேட்டி, சேலை மற்றும் பொங்கல் தொகுப்புப் பொருட்களுடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்குவது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கான முடிவு, அரசின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஆய்வுக்குப் பிறகு அறிவிப்பு

அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வார் என அமைச்சர் கூறினார். ஆய்வுக்குப் பிறகு பொங்கல் பரிசு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அதற்கான உத்தரவு முதலமைச்சரால் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: பொங்கல் பரிசாக ரூ. 3000 முதல் ரூ. 5000 ரொக்க பணம் வழங்க..... அரசின் பரிசீலனையில் நிதிஉதவி...!!!!