டாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு.! சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்! திணறிய காவல்துறை.!
டாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு.! சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்! திணறிய காவல்துறை.!
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடக்கவுள்ள தொடர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி வந்த பாமகவினரை போலீசார் பெருங்களத்தூர் அருகே தடுத்து நிறுத்தினர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
இந்தநிலையில், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாமகவினர் ஜி.எஸ்.டி சாலையின் இருபுறமும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று நடக்கவிருக்கும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான பாமகவினர் சென்னை நோக்கி படையெடுத்ததால் காவல்துறைக்கு சற்று சிரமம் ஏற்பட்டது.