பெரும் அதிர்ச்சி! ஊருக்குள் அரிவாளுடன் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய கும்பல்..! பகீர் வீடியோ..!!!
தமிழ்நாட்டில் சமீப காலமாக தொடர்ச்சியாக நிகழும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக நெல்லை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்கள் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளது. இந்த நிலையில், நாங்குநேரி மற்றும் மானாமதுரை பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாங்குநேரி அருகே இருவர் கொலை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உட்பட இரண்டு பேர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐந்து பேரை குறிவைத்து ஆறு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதுடன், அரிவாளால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் குணசேகரனை ஓட ஓட வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு…..!
மேலும் சம்பவத்தை விசாரிக்க சென்ற காவல்துறை வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக ஏழு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மானாமதுரை அருகே அரிவாள் தாக்குதல்
நாங்குநேரி சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் மேலும் ஒரு வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைக்காட்டூர் பகுதியை சேர்ந்த ராஜு என்பவருடன் மதுபோதையில் இருந்த சிலர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கியதாகவும் தெரிகிறது. தாக்குதலில் இருந்து தப்பித்த ராஜு தனது வீட்டிற்கு சென்றபோதும், மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் அவரை துரத்தி வந்து அங்கிருந்தவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
பலர் காயம் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்த தாக்குதலில் தெருவில் நின்றிருந்த தினேஷ், ராஜேந்திரன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான அரிவாள் தாக்குதல் காட்சிகள் சில சிசிடிவி பதிவுகளாக வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் பகுதியில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மானாமதுரை சம்பவம் தற்போது மாவட்டம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஜோதிடர் பூஜை செய்வதாக கூறி தனி அறைக்குள் 2 மணிநேரம்.... கதற கதற 16 வயது சிறுமியிடம் அத்துமீறல்! ஜாதகம் பார்க்கச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!!!