ஸ்டாலினின் நெருங்கிய நட்பு .. கம்பி நீட்டிய சோகம்.. ஊழல் கூடாரம் திமுக என விமர்சனம்.! 



Pugazh Gandhi Quits DMK Alleges Party Has Become A Hub Of Corruption

திமுக அயலக அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது விலகல் கடிதத்தை திமுக தலைமையகத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார். 

அந்தக் கடிதத்தில், "திமுக தற்போது ஊழல் மிகுந்த கட்சியாகவும், ஒரு சிலரின் சர்வாதிகார கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகவும் மாறிவிட்டது. திறமையான இளைஞர்களுக்கு கட்சியில் உரிய வாய்ப்போ, அங்கீகாரமோ வழங்கப்படுவதில்லை" என்று புகழ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கட்சியின் தற்போதைய செயல்பாடுகளில் விரக்தி அடைந்ததாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

புகழ் காந்தியின் இந்த விலகல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: # சற்று முன் : பாஜகவிலிருந்து முன்னால் எம்.பி. நரசிம்மன் திடீர் ராஜினாமா..! அரசியலில் அடுத்த பரபரப்பு..!!!

இதையும் படிங்க: சற்றுமுன்... அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் திடீரென விலகினார்..! CM விஜய் தொகுதியில் பரபரப்பு....ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!