உங்ககிட்ட பைக் இருக்கா.? செய்யக்கூடாத 15 விஷயங்கள்...எச்சரிக்கை.!
இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பைக் ஓட்டும் போது செய்யப்படும் சில பொதுவான தவறுகளே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக சாலை பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, மொபைல் போன் பயன்படுத்துவது, திடீரென லேன் மாற்றுவது போன்ற செயல்கள் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன் செல்லும் வாகனத்திற்கு மிக அருகில் செல்வது, ரியர் வியூ மிரரை பயன்படுத்தாமல் இருப்பது, ஒரு கையால் வாகனம் ஓட்டுவது மற்றும் மழைக்காலங்களில் கவனக்குறைவாக பயணம் செய்வது போன்றவை விபத்து அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: விஜய்யை பக்கத்தில் பார்க்கும் ஆசையில் வாகனத்தை பின்தொடர்ந்ததால் கீழே விழுந்து இளைஞரின் மண்டை உடைந்தது…!!!

மேலும், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், திடீரென பிரேக் பிடித்தல், வளைவுகளில் வேகமாக திரும்புதல், டயர் மற்றும் பிரேக் பராமரிப்பை புறக்கணித்தல் உள்ளிட்ட தவறுகளும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி, எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணமே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழி எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நேர்ந்த கோர விபத்தால் 5 பேர் உயிரிழப்பு! சேலம் அரியானூர் அருகே அதிர்ச்சி!!!