பூச்சிக்கொல்லி மருந்தின் டியூபை வாயில் வைத்து உரிஞ்சதால் நேர்ந்த சோகம்; விவசாயி பரிதாப பலி.!



in Krishnagiri Farmer Died 

 

விவசாயி ஒருவரின் அலட்சியம், அவரின் உயிரை பார்க்க காரணமாக அமைந்த சோகம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், அங்கையநாயகனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சின்னசாமி (44). இவர் விவசாயி ஆவார். கடந்த பிப் 7 அன்று, முள்ளங்கி தோட்டத்தில் இயந்திரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க திட்டமிட்டுள்ளார். 

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி செயல்.. ஓசூரில் கொடுமை.!

இதற்காக வேளாண் ரசாயன வேதிப்பொருளை கலந்துகொண்டு இருந்தார். அப்போது, இயந்திரத்தின் டியூபை வாயில் வைத்து உறிஞ்சியுள்ளார். அச்சமயம், அவரின் வாயில் ரசாயனம் சிறிதளவு வந்து, அதனை விழுங்கியுள்ளார். 

Krishnagiri

உடல்நிலை மோசமானது

மருந்தை அவர் வெளியே துப்பினாலும், வயிற்றுக்குள் சென்ற மருந்து உடல்நிலை மோசமாகியுள்ளது. உடனடியாக சிகிச்சை பெறாமல் அவர் அலட்சியம் காண்பித்து இருக்கிறார். 

இதனிடையே, கடந்த பிப்.10 அன்று வீட்டில் மயங்கிவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, செல்லும் வழியிலேயே அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இந்த விஷயம் குறித்து பர்கூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி: லாரி உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்து; 3 பேர் பரிதாப பலி.!