ஜாமின்ல ஏன் எடுக்கல? சிறைக்கு சென்றுவந்த உடனே மனைவி கொலை.. சிவகங்கையில் பகீர் சம்பவம்.! 



Sivaganga Man Arrested for Allegedly Killing Wife Days After Release from Prison

சிறைக்கு சென்று திரும்பிய மறுநாளே, ஜாமினில் எடுக்கவில்லை என்று கூறி மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தம்பதி: 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழைத், சொட்டத்தட்டி கிராமத்தில் வசித்து வருபவர் யோகராஜன் என்ற கருவாயன் (வயது 29). இவரின் மனைவி பாண்டிச்செல்வி. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 6 மற்றும் 3 வயதுடைய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

பொறுப்பில்லாதவன்: 

திருமணம் முடிந்தாலும் பொறுப்பற்ற முறையில் தறிகெட்டு வாழ்க்கையை நகர்த்தி வந்த யோகராஜன், குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் மீது பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்கும் உள்ளன. மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஆத்திரம்: 

தொடர் குற்றத்தால் யோகராஜன் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டு கடந்த ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். கணவர் சிறைக்குச் சென்றபின் பாண்டிச்செல்வி அவரை ஜாமினில் எடுக்க முயற்சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த யோகராஜன், பெற்றோரின் முயற்சியில் வெளியே வந்துள்ளார். 

Crime news

கொலை: 

இந்நிலையில், சிறைவாசத்துக்குப்பின் 2 நாட்களுக்கு முன்பு வெளியே வந்தவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் மாலை நேரத்தில் நடந்த சண்டையின்போது, ஆத்திரமடைந்த யோகராஜன் மனைவியை அரிவாள் கொண்டு சரமாரியாக வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் பாண்டிச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

விசாரணை: 

பாண்டிச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் & மருத்துவ குழுவினர் பாண்டிசெல்வி உயிரிழந்ததை உறுதி செய்த நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையை அரங்கேற்றிய யோகேஸ்வரன் திருபுவனம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதையும் படிங்க: கடப்பாரையால் தாக்கி மனைவி கொடூர கொலை.. நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.!