#|BREAKING: தமிழகத்தை மீண்டும் உலுக்கிய வெடி விபத்து... காவல்துறை தீவிர விசாரணை.!



breaking-news-another-fire-cracker-factory-accident-roc

நேற்று கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த துயரம் மறைவதற்குள் மீண்டும் ஒரு வெடி விபத்து  தமிழகத்தை அதிரச் செய்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே  பூங்குடி என்ற பகுதியில் 

பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடி விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்து  உயிருக்கு ஆபத்தான நடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamilnaduபுதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்குமிடத்தில் இந்த வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் படுகாயம் அடைந்த ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

tamilnaduஇந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் நடைபெற்ற வெடி விபத்து  சம்பவங்கள் மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.