தனி அறைக்கு வா பாப்பா.... குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பல் டாக்டர் செய்த கொடூரம் ! செல்போனை பரிசோதித்த போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி! நீதிமன்றத்தின் அதிரடி தண்டனை...!!
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பல் மருத்துவமனையில் பணியாற்றிய எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர், சிகிச்சைக்காக வந்த குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை என்ற பெயரில் குழந்தைகளிடம் அத்துமீறல்
அரிசோனா மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பல் மருத்துவமனையில் எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றிய டெலோன் கார்சியா, 4 முதல் 6 வயதுடைய குழந்தைகளை பற்களைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறி தனி அறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மயக்க நிலையில் இருந்த குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல் நடத்தியதுடன், ஆபாசப் புகைப்படங்களையும் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெற்றோர் புகாரால் அம்பலமான உண்மை
6 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அதன்பின் கார்சியாவின் செல்போனை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் மொத்தம் மூன்று குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 ஆண்டுகள் சிறைத்தண்டனை
விசாரணையின்போது கார்சியா தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி குழந்தைகள் பாதுகாப்பு விதிகளை மீறியதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.