எங்கிருந்துடா வந்திங்க... திடீரென சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்! அதிர்ச்சியில் உறைந்த நபர்.... வைரல் வீடியோ!!!



thailand-waterfall-bat-tourist-viral-video

தாய்லாந்தின் பிரபலமான நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் திடீரென வௌவால் வந்து அமர்ந்தது. எதிர்பாராத இந்த நிகழ்வால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பயணி அமைதியாக நின்றுகொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பறந்து வந்த வௌவால் அவரது தோள்பட்டையில் பிடித்துக்கொண்டது. அதை விரட்டினால் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில், அவர் அசையாமல் சில வினாடிகள் சிலை போல நின்றார்.

இதையும் படிங்க: பயணி போல ஏறி படகில் சவாரி சென்ற குரங்கு! அதுக்குள்ள என்ன அவசரம்ன்னு தெரியல... ஆற்றில் குதித்து அது செஞ்ச வேலையை பாருங்க! வைரல் வீடியோ...!!!

தோளில் அமர்ந்த வௌவால்

வௌவால் தோளில் இருந்தபோதும் அதைத் தொடாமல், பதற்றத்துடன் அப்படியே நின்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அருகில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

https://www.instagram.com/reel/DdO4x-esse7/?utm_source=ig_web_button_share_sheet

சமூக வலைதளங்களில் வைரல்

இந்த காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. குறிப்பாக, பயணியின் விசித்திரமான எதிர்வினை பலரையும் சிரிக்க வைத்துள்ளது. “பேட்மேன் உங்களை பிடித்துவிட்டார்” என சிலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு சுவாரசியமான தருணம் இது என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அந்த வைரல் வீடியோ தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: திக் திக் நிமிடம்.... திடீரென சாலையை நோக்கி ஓடிய சிறுமி! நொடிப் பொழுதில் கடவுள் ரூபத்தில் வந்த கடைக்காரார்...... பதறவைக்கும் காட்சி..!!!