எனக்கு இன்னொரு முகம் இருக்கு..! காட்டவா.? செந்தில் பாலாஜியை தூக்கி போட்டு மிதிப்பேன்.! அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.!

எனக்கு இன்னொரு முகம் இருக்கு..! காட்டவா.? செந்தில் பாலாஜியை தூக்கி போட்டு மிதிப்பேன்.! அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.!



annamalai-talk-about-senthilbalaji

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் கரூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். 

இந்த தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். சமீபத்தில் வேட்பாளர் அண்ணாமலைக்காக நமீதா வாக்கு சேகரித்தார். அண்ணாமலையை திமுகவினர் தொந்தரவு செய்து வருவதாக நேற்றைய தினம் வாக்காளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

annamalai

இந்தநிலையில் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, கர்நாடகாவில் எஸ்பியாக பணியாற்றியபோது பல பேரை மொத்தியுள்ளேன். இங்கு என்னை அரசியல் செய்ய விடாமல் செய்கிறீர்கள். செந்தில்பாலாஜி எல்லாம் ஒரு ஆளா? அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன். நான் ஐபிஎஸ் பதவியில் இருந்த காலத்தில் உன்னைப் போல் எத்தனையோ பிராடுகளை பார்த்து இருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கின்றேன்.

நான் வன்முறை இல்லாமல் நியாயமான அரசியல் செய்ய வந்துள்ளேன். என் மீது வன்முறையை திணித்து, நான் வன்முறை செய்ததாக மாற்ற வேண்டாம். நான் போராடுவது எல்லாம் மக்களான உங்களுக்காக தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என பேசினார். திமுகவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.