
Advice on the Nonviolent Way
கும்பகோணம் பெரிய தெருவில் கடை வைத்து நடத்திக்கொண்டு வருகிறார் வட மாநிலத்தை சேர்ந்தவர். இந்தநிலையில் இவரது கடைக்கு வரும் பெண்களிடமும் ,வாடிக்கையாளர்களிடமும் தமிழ்நாடு இனிமேல் எங்களது இனிமேல் உங்களுக்கு தமிழ்நாட்டில் ஏது வீடு, ஏது நாடு என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் கடை நடத்துபவரை கண்டிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒன்றுகூடிய தமிழக மக்கள் அந்த நபரிடம் வன்முறையில் ஈடுபடாமல், அகிம்சை வழியில் ஈடுபட்டு, தமிழ்நாட்டில் வந்து தொழில் செய்யுங்கள் தவறில்லை ஆனால், தமிழக மக்களையும், தமிழ்நாட்டையும் தவறாக பேசாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.
கும்பகோணத்தில் தமிழர்களை பற்றி தமிழர்களிடமே தொடர்ச்சியாக இழிவாக பேசிவந்த கும்பகோணம் பெரிய தெருவை சேர்ந்த வட இந்திய மார்வாடி நிறுவனத்திடம் தமிழர் விரோத போக்கினை நிறுத்திக் கொள்ள நாம் தமிழர் கட்சி சார்பாக நேரில் சென்று எச்சரித்த போது..... pic.twitter.com/MlCsweZuU9
— DMK = BJP (@TamilNaduMan) September 29, 2019
இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பகுயில் உள்ள மக்களை பாராட்டி வருகின்றனர். "இந்த நாகரிகம் தான் தமிழனை பெறுமை படவைக்கிறது. அகிம்சை வழியில் அறிவுரை சொல்லும் கெத்தே தனி தான்" எனவும் பாராட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement