அடுத்த சீன் இதுதானா? டாக்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிறக்கடிக்க ஆசை மீனா!
பட்டப் பகலில் துணிகர கொலை... முன் விரோதமா.? வெட்டி சாய்க்கப்பட்ட நபர்.! வலை வீசி தேடும் காவல்துறை.!

திண்டுக்கல் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் நபர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பொன்மான்துறை பகுதியை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்த ராசு என்கின்ற இருளப்பன் (40). இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இருளப்பன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் மகன் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இருளப்பனும் அவரது மனைவியும் மதிய உணவு சாப்பிட்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த 6 மர்ம நபர்கள் இருளப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருளப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் நிலம் வாங்கியது தொடர்பாக இருளப்பனுக்கும் வேறொரு நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. மேலும் கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.