18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் பற்றிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!. பேரதிர்ச்சியில் டிடிவி தினகரன்!.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் பற்றிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!. பேரதிர்ச்சியில் டிடிவி தினகரன்!.



18 MLA's Case judgement released ttv dhinakaran shocked


தமிழகத்தின் 18 தொகுதிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அரசியல் நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் 18 எம்எல்ஏக்களின் மனு அளித்தனர். இந்த நிலையில் சபாநாயகர் தனபால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் இவர்களை தகுதி நீக்கம் செய்தார்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய நீதி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணா நீதி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

 மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணா இவ்வழக்கை முழுவதும் விசாரித்து முடித்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதில் சபாநாயகர் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது  செல்லும் என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று தெரிவித்து இருக்கும் நீதிபதி இது சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறியுள்ளார்.