சனியின் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசியினருக்கு 139 நாட்கள் சோதனை காலம்! கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?

சனி வக்ரம் 2025 – 5 ராசிகளுக்கு சோதனையான காலம்
சனி பகவான் நவக்கிரகங்களில் முக்கியமானவர். நன்மையும் தீமையும் இரட்டிப்பாக வழங்கக்கூடிய சக்தி அவரிடம் உள்ளது.
இந்த வருடம் ஜூலை 13ஆம் தேதி, சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலைக்கு செல்வதால், சில ராசிகளுக்கு இது சிக்கலான காலமாக இருக்கும்.
இந்த வக்ரம் 139 நாட்கள் நீடித்து, நவம்பர் 28ஆம் தேதி சனி நிவர்த்தி அடைவார். இந்நிலையில், கீழ்காணும் ஐந்து ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: vastu tips: வீட்டில் செல்வம் குவியணுமா? ரோஜா பூவை வைத்து இதெல்லாம் செய்யணுமாம்! பார்த்து பயன்பெறுங்கள்...
மேஷ ராசிக்கு சோதனையின் காலம்
இந்த வக்ர காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சவாலானது.
உடல்நலம் பாதிக்க வாய்ப்பு உள்ளது
அலுவலக பணியில் கவனம் தேவை
சக ஊழியர்களுடன் சிக்கல் உருவாகலாம்
நிதி பிரச்சனை, கடன் தேவை ஏற்படும்
மிதுன ராசிக்கு மன அழுத்தம்
மிதுன ராசிக்காரர்கள், நீங்கள் பேசுவதை யோசித்து பேச வேண்டும்.
வீடு, வேலை இடங்களில் வாக்குவாதம் தவிர்க்கவும்
உழைப்பிற்கேற்ற பலன் குறையும்
வேலை சுமை அதிகரிக்கும்
குடும்ப உறவுகளில் மனஸ்தாபம் ஏற்படும்
கன்னி ராசிக்கு நிதி சிக்கல்
கன்னி ராசிக்காரர்கள் இந்த வக்ர காலத்தில் பண வரவு குறையும்.
பணம் சம்பாதிப்பதில் சிரமம்
வருமானம் குறையும்
குடும்பத்தில் அமைதி குறையும்
சாமர்த்தியமாக சிக்கல்களை சமாளிக்க வேண்டிய நேரம்
துலாம் ராசிக்கு உடல் மற்றும் மன ரீதியான சிரமம்
துலாம் ராசிக்காரர்கள் உடல்நலம் மற்றும் மனநிலை பாதிக்கப்படும்
பணி சுமை காரணமாக ஆரோக்கியம் குறையும்
பழைய சொத்துக்கள் தொடர்பான சிக்கல்கள்
வாக்குவாதங்கள், சண்டைகள் தவிர்க்க வேண்டும்
குடும்பத்தில் அமைதி இருக்காத
தனுசு ராசிக்கு நெருக்கடி
தனுசு ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
பணநிலை வீழ்ச்சி, கடனே முக்கிய ஆதாரம்
அலுவலகத்தில் நெருக்கடியான சூழ்நிலை
எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்
வேலைக்கேற்ப கவனம் மிக அவசியம்