விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
vastu tips: வீட்டில் செல்வம் குவியணுமா? ரோஜா பூவை வைத்து இதெல்லாம் செய்யணுமாம்! பார்த்து பயன்பெறுங்கள்...

வாஸ்து சாஸ்திரத்தில் ரோஜா மலரின் முக்கியத்துவம்
ரோஜா பூ எப்போதும் அதன் அழகும் நறுமணமும் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. ஆனால், இது வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆன்மீக மரபுகளிலும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
வீட்டில் செழிப்பை தரும் ரோஜா பூ பரிகாரங்கள்
வாஸ்து நிபுணர்கள் கூறும்போது, ரோஜா மலர் சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது எதிர்மறை ஆற்றலை நீக்கி, செல்வ வளர்ச்சிக்குத் உதவுகிறது.
வெள்ளிக்கிழமைகளில், லக்ஷ்மி தேவிக்கு ரோஜா பூஜை செய்ய வேண்டும். மாலை நேரத்தில் ரோஜா மலரால் ஆராதித்து, அந்த பூவை வீட்டின் லாக்கரில் வைத்தால், குடும்பத்தில் ஆரோக்கியம் மற்றும் நிதி முன்னேற்றம் கிட்டும் என நம்பப்படுகிறது.
எதிர்மறை ஆற்றலை நீக்கும் வாஸ்து பரிகாரம்
ஒரு வெள்ளை துணியில் ஐந்து சிவப்பு ரோஜா பூக்களை வைத்து, அதில் நான்கு மூலையிலும் ஒன்று நடுவில் வைத்து கட்டி, அதை ஓடும் நீரில் விட வேண்டும். இது வீட்டில் சமநிலை, மகிழ்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மை பெறுவதற்குக் காரணமாகும்.
அனுமனுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ரோஜா பூஜை
11 ரோஜா மலர்களை அனுமனுக்கு அர்ப்பணித்து தொடர்ந்து பூஜை செய்தால், வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை சந்திக்கலாம். இது நிதி வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கணவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருப்பவர்கள் இந்த 5 ராசியினர் பெண்கள் மட்டும் தானாம்! இதுல உங்க ராசி இருக்கா?