சொத்து பத்திரம் லாக்கரில் இருக்கு.... அந்த சாவியை அவரிடம் கொடுத்துருங்க! கடிதம் எழுதிவிட்டு தொழிலதிபர் செய்த பயங்கரம்! 2 பிஞ்சு குழந்தைகளையும் மனைவியையும் துடிக்க துடிக்க.... பகீர் சம்பவம்!!!
கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் சுமை காரணமாக தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி
மைசூரு மாவட்டம் ஹுன்சூரில் வசித்து வந்த 42 வயதான ஹரிஷ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். அவரது மனைவி நிஷ்சிதா (34), மகள்கள் நிக்ஷா (12), ரக்ஷா (8) ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து நீண்ட நேரமாக எந்த அசைவும் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். வீட்டைத் திறந்து பார்த்தபோது, நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!
கடன் நெருக்கடியால் எடுத்த விபரீத முடிவு
போலீஸாரின் விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் மற்றும் ஹரிஷ் மீது இருந்த கடன் சுமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே தனது வயதான தாயாரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும், பின்னர் நள்ளிரவில் மனைவி மற்றும் இரு மகள்களின் வாய், மூக்குப் பகுதிகளை பிளாஸ்திரால் ஒட்டி மூச்சுத்திணறச் செய்து கொன்றதாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. அதன்பின் வீட்டின் முதல் மாடியில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடிதம், தாயாரின் வாக்குமூலம்... தொடரும் விசாரணை
தற்கொலைக்கு முன் ஹரிஷ் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், தனது உடல் முதல் மாடியில் இருக்கும் என்றும், சொத்துப் பத்திரங்கள் லாக்கரில் இருப்பதையும், அதன் சாவியை குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைக்குமாறும் எழுதியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஷின் தாயாரும் குடும்பத்திற்கு அதிகளவில் கடன் இருந்தது உண்மை என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், தொழில் நெருக்கடி மட்டுமே காரணமா அல்லது குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா என்பது குறித்து மைசூரு எஸ்பி மல்லிகார்ஜுன் பால்தண்டி தலைமையிலான போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னால சமாளிக்க முடியல.... இலவச மகளிர் பஸ் பயண திட்டத்தால் மனைவி, மகனை கொன்று ஜவுளிக்கடையில் தற்கொலை செய்த ஓனர்..!!!