இவ்வளவும் இரவு நேர விருந்துக்காக.... மாதவிடாய் கப்பில் மறைத்து சிக்கிய லிவ் - இன் ஜோடி! மறைத்த அந்த இடத்தை கண்டு ஆடிப்போன அதிகாரிகள்! விசரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்.!!!
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு எம்.டி.எம்.ஏ வகை செயற்கை போதைப்பொருளைக் கடத்தி, இரவு நேர விருந்துகளில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் லிவ்-இன் ஜோடியை எர்ணாகுளம் எக்சைஸ் துறையினர் கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் தண்டர்' நடவடிக்கையில் இந்த கைது நடைபெற்றுள்ளது.
போதைப்பொருளை மறைக்க பயன்படுத்திய அதிர்ச்சி உத்திகள்
விசாரணையில், முகமது ஷாஃபி மற்றும் அவரது பெண் தோழி சரிதா ஆகியோர், சோதனையின்போது அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க பல்வேறு முறைகளை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. போதைப்பொருளை மென்ஸ்ட்ருவல் கப்பில் மறைப்பது, சிறிய பொட்டலங்களை உள்ளாடையின் பேடிங்கில் தைத்து வைப்பது, மேலும் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் முட்டை வைக்கும் தட்டில் பதுக்கி வைப்பது உள்ளிட்ட முறைகளை அவர்கள் கையாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த பெரியப்பா மகனுடன் திருட்டுத்தனமாக உறவு! தகராறில் காதலனே கடைசியில் எமனாக மாறிய கொடூரம்.... சடலத்தை எரித்து பகீர் பின்னணி...!!!
கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை
போலீஸ் தரப்பின் தகவலின்படி, பெங்களூருவில் இருந்து வாங்கிய 100 கிராம் போதைப்பொருளுடன் 20 கிராம் அஜினோமோட்டோ பொடியைக் கலந்து, ஒரு கிராமை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் வாரந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
94 கிராமுக்கும் மேற்பட்ட போதைப்பொருள் பறிமுதல்
ஆபரேஷன் தண்டர் சிறப்புப் படையினர் எர்ணாகுளத்தில் உள்ள விடுதி அறை மற்றும் ஆலப்புழையில் உள்ள வீட்டில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில் 94 கிராம் போதைப்பொருள் மற்றும் கணிசமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான இருவரிடமும் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பு குறித்து எக்சைஸ் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.