ஐயோ... சாலையில் ஊர்ந்து சென்று குரைத்த வாலிபர்! நாய் கடித்த 3 மாதங்களுக்கு பிறகு விசித்திரமாக நடந்துகொண்ட அதிர்ச்சி வீடியோ!
குஜராத்தில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாய் கடித்ததற்குப் பிறகு ஒருவர் விசித்திரமாக நடந்துகொண்ட வீடியோ பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மூலம் வெறிநாய் கடி எவ்வளவு ஆபத்தானது என்பதை மருத்துவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
வைரலான அதிர்ச்சி வீடியோ
நாய் கடித்த அந்த நபர், நாயைப் போலவே சாலையில் ஊர்ந்து சென்றும், குரைத்தும் நடந்து கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நரம்பு மண்டலத்தை தாக்கும் வைரஸ்
மருத்துவர்கள் கூறுகையில், நாய் கடியால் ஏற்படும் வைரஸ் மனிதனின் நரம்பு மண்டலத்தை தீவிரமாக பாதிக்கக்கூடும். இதனால் கட்டுப்பாடற்ற செயல்கள், அச்சம் மற்றும் விலங்குகளைப் போல நடக்கும் அறிகுறிகள் தோன்றலாம். குறிப்பாக தண்ணீரைக் கண்டால் பயப்படுதல் போன்ற ராபிஸ் சிம்டம்ஸ் தென்படுவது மிகவும் ஆபத்தான நிலை என எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: இது தேவையா? கிங் கோப்ரா பாம்புடன் விளையாடிய நபர்! வெறித்தனமாக சுருண்டு சுருண்டு சீறிப்பாய்ந்து..... திக் திக் காணொளி!
உடனடி சிகிச்சை அவசியம்
நாய் கடித்தவுடன் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது உயிரைக் காக்கும் முக்கிய நடவடிக்கை என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகலாம்.
இந்த சம்பவம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய பாடமாக அமைந்துள்ளது. தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணிகள் கடித்தால் உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பதே மருத்துவ எச்சரிக்கை. சிறிய காயம் என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் விடுவது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
પાલનપુરમાં હડકવાનો કહેર! કૂતરું કરડ્યા બાદ જુઓ યુવકની કેવી થઇ હાલત!#Rabies #Palanpur #Gujarat #GujaratiNews #GujaratSamachar pic.twitter.com/VgrMLRnVzJ
— Gujarat Samachar (@gujratsamachar) January 31, 2026
இதையும் படிங்க: ஒரு நொடி தாங்க.... 5 வயது புள்ளையை தரையில் இழுத்து போட்டு கடித்து குதறிய தெரு நாய்! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி!