60 வயது மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொடுர கொலை.. தேனியில் நடந்த திக்., திக் சம்பவம்.!
வட்டித்தொழில் செய்து வந்த மூதாட்டி கொல்லப்பட்டார்.
வெளியே வரவில்லை:
தேனியில் உள்ள பழைய போஸ்ட் ஆபிஸ், ஓடைத்தெருவில் வசித்து வருபவர் ராதா (வயது 60). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதனிடையே, நேற்று காலை நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!
கொலை:
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, மூதாட்டி சணல் கயிறால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டவாறு சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி தகவல்:
அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், காலை நேரத்தில் மூதாட்டி வெளியே வந்தபோது மர்ம நபர்களால் சணல் கயிறால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதும், தலையை தரைப்பகுதியில் பலமாக மோதியும் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டுமனை வாங்க பணம் வைத்திருந்தததால், அந்த பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: கை-கால்களை கட்டி கொடூரம்.. 70 வயது மூதாட்டிக்கு நள்ளிரவில் பயங்கரம்.. சென்னையில் ஷாக்.!