ஆசிரியயை வெளியே கூப்பிட்ட மர்ம நபர்! அடுத்த நொடி ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...! பள்ளி வாசலிலேயே நடந்த கொடூரம்....!!!



faridabad-school-teacher-stabbed-death-cctv-investigati

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிக்ரோனா கிராமத்தில், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகம் அருகே பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தியா என்ற ஆசிரியையின் உயிரை பறித்த இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வாயிலில் நடந்த திடீர் தாக்குதல்

சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த சந்தியா, திங்கட்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது முகத்தை துணியால் மூடியபடி வந்த இளைஞர் ஒருவர் அவரைச் சந்திக்க அழைத்ததாக கூறப்படுகிறது. பள்ளி வாயிலுக்கு வந்ததும், அந்த நபர் திடீரென கத்தியால் கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரோட்டில் மயங்கி விழுந்த ஆசிரியை..! காப்பாற்ற போன இளைஞர்கள் செய்த விபரீதக் காரியம்..... இறுதியில் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி உண்மை! பகீர் வீடியோ...!!!

சிசிடிவியில் பதிவான கொடூரம்

தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் ஆசிரியையை காப்பாற்ற ஓடிவந்தனர். ஆனால், அவர்களையும் தாக்குவதாக மிரட்டிய தாக்குதலாளர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் படுகாயமடைந்த ஆசிரியையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் முழுவதும் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

திட்டமிட்ட கொலையா? போலீசார் தீவிர விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்திற்கு மிக அருகில் இந்த கொலை நடந்தது அப்பகுதியில் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: அம்மா அவுங்களோட டார்ச்சல் தாங்க முடியல...காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.! ஒட்டுமொத்ததையும் கடிதத்தில் எழுதிய மகள்... பகீர் பின்னணி.!!!