ரோட்டில் மயங்கி விழுந்த ஆசிரியை..! காப்பாற்ற போன இளைஞர்கள் செய்த விபரீதக் காரியம்..... இறுதியில் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி உண்மை! பகீர் வீடியோ...!!!



incorrect-cpr-causes-rib-fracture-to-school-teacher-in-

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் மயங்கி விழுந்த பள்ளி ஆசிரியைக்கு, மாரடைப்பு என தவறாகக் கருதி அளிக்கப்பட்ட முதலுதவி எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஆர் முறையாகப் பயிற்சி பெறாமல் அளிக்கப்பட்டதால், ஆசிரியையின் இரண்டு விலா எலும்புகள் முறிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பத்தால் மயங்கி விழுந்த ஆசிரியை

கைலாரஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயதான பள்ளி ஆசிரியை லலிதா தாகத், கடும் வெப்பம் காரணமாக தலைசுற்றி தனது ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு இளைஞர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து உடனடியாக உதவ முயன்றனர்.

இதையும் படிங்க: கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு போன 38 வயது நபர்! பரிசோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி! இன்பத்திற்காக இப்படியா? சுமார் 36 மணி நேர அவதி.. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!!

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலும், பின்னரும் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் தொடர்ந்து மார்பில் அழுத்தம் கொடுத்து முதலுதவி அளித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்

மருத்துவமனையில் பரிசோதித்த வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனிஷ் சர்மா தலைமையிலான மருத்துவக் குழு, ஆசிரியைக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தது. ஆனால் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், அவரது இரண்டு விலா எலும்புகள் முறிந்திருந்தது தெரியவந்தது.

விழிப்புணர்வு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்

மருத்துவர்கள் கூறுகையில், முறையான பயிற்சியின்றி தவறான முறையில் முதலுதவி அளிக்கப்பட்டதே எலும்பு முறிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்றனர். நல்லெண்ணத்துடன் உதவ முயன்றாலும், சிபிஆர் போன்ற அவசர சிகிச்சை முறைகளை சரியாகக் கற்றுக்கொண்டு செயல்படுவது மிகவும் அவசியம் என்றும், தவறான மார்பு அழுத்தம் விலா எலும்பு முறிவு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: 3 வருஷமா கடும் அவதி... நாளுக்கு நாள் அதிகரித்த வலி! கடைசியில் எக்ஸ்-ரேயில் தெரிந்த மர்மம்.... மருத்துவர்களையே ஆடிப்போன அந்த ஒரு தருணம்.!!!