தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...
சூப்பர் ஜோடி ... புதுவித பொலிவுடன் ஜனனி ஐயரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்!

தமிழ் சினிமாவில் 'அவன் இவன்' மற்றும் 'தெகிடி' போன்ற படங்களில் தனது அழகும் திறமையும் காண்பித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். தற்போது, தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில், ஜனனி ஐயர் தனது நீண்ட நாள் காதலரான ரோஷன் ஷாமுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Now and Forever" என்ற வார்த்தையுடன் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், தனது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ரோஷன் ஷாம் — சென்னையில் பிறந்து, வளர்ந்து தற்போது துபாயில் விமானியாக பணியாற்றி வருகிறார். இவரே ஜனனி ஐயரின் வருங்கால கணவர். மணமேடையில், அழகிய மாலை, கிளாசிக் ஜூவல்லரி மற்றும் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து ரோஷனுடன் அழகில் பொலிந்து நின்ற ஜனனி, தங்கள் நெருக்கமான பந்தத்தை அனைவருக்கும் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: வாவ்.. செம கியூட் ஜோடி.! நடிகை ஜனனி ஐயருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.! மாப்பிள்ளை யாருனு பார்த்தீங்களா!!
இந்த இனிமையான நிச்சயதார்த்தநிகழ்வுக்குப் பிறகு, இருவரும் இந்த ஆண்டு முடிவிற்குள் திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வாவ்.. செம கியூட் ஜோடி.! நடிகை ஜனனி ஐயருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.! மாப்பிள்ளை யாருனு பார்த்தீங்களா!!