அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
பள்ளி மாணவர்களுக்கு ஆபாச படம் அனுப்பி, மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை!
பள்ளி மாணவர்களுக்கு ஆபாச படம் அனுப்பி, மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை!
சுவிச்சர்லாந்து நாட்டில் 38 வயதுடைய பெண் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் சுமார் 10 வருடங்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு ஆபாச படங்கள், ஆபாசமான குறுஞ்செய்தி என வலுக்கட்டாயமாக அனுப்பியுள்ளார். இதன் மூலமாக பல மாணவர்களை அவரின் ஆசைக்கு இணங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்களை செய்து பல மாணவர்களை கட்டாயப்படுத்தி உறவும் மேற்கொண்டு வந்துள்ளார். மேலும், மாணவர்களை தவறாக புகைப்படம் எடுத்து, அவர்களை மிரட்டியும் வந்துள்ளார். இவர் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் மாணவர் ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த மாணவனின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்ஆசிரியை செய்த மோசமான செயல் வெளியானது. மேலும் இச்சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.